திருப்பாடல்கள் 73

முந்திய அடுத்த
1⁽உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்␢ கடவுள் எவ்வளவு நல்லவர்!␢ தூய உள்ளத்தினர்க்கு␢ ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!⁾ 2⁽என் கால்கள்␢ சற்றே நிலைதடுமாறலாயின;␢ நான் அடிசறுக்கி விழப்போனேன்.⁾ 3⁽ஆணவம் கொண்டோர்மேல்␢ நான் பொறாமை கொண்டேன்;␢ பொல்லாரின் வளமிகு வாழ்வை␢ நான் கண்டேன்.⁾ 4⁽அவர்களுக்குச்␢ சாவின் வேதனை என்பதே இல்லை;␢ அவர்களது உடல்,␢ நலமும் உரமும் கொண்டது.⁾ 5⁽மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்␢ அவர்களுக்கு இல்லை.␢ மற்ற மனிதர்களைப் போல்␢ அவர்கள் துன்புறுவதில்லை.⁾ 6⁽எனவே, மணிமாலைபோல்␢ செருக்கு அவர்களை அணி செய்கிறது;␢ வன்செயல் அவர்களை␢ ஆடைபோல மூடிக்கொள்கிறது.⁾ 7⁽அவர்களின் கண்கள்␢ கொழுப்பு மிகுதியால்␢ புடைத்திருக்கின்றன;␢ அவர்களது மனத்தின் கற்பனைகள்␢ எல்லை கடந்து செல்கின்றன.⁾ 8⁽பிறரை எள்ளி நகையாடி␢ வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;␢ இறுமாப்புக்கொண்டு␢ கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.⁾ 9⁽விண்ணுலகை எதிர்த்து␢ அவர்கள் வாய் பேசுகின்றது;␢ மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்␢ விரிந்து பரவுகின்றது.⁾ 10⁽ஆதலால், கடவுளின் மக்களும்␢ அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;␢ இவ்வாறு, கடல் முழுவதையும்␢ உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.⁾ 11⁽‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?␢ உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’␢ என்கின்றார்கள்.⁾ 12⁽ஆம்; பொல்லார்␢ இப்படித்தான் இருக்கின்றனர்;␢ என்றும் வளமுடன் வாழ்ந்து␢ செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.⁾ 13⁽அப்படியானால், நான் என் உள்ளத்தை␢ மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?␢ குற்றமற்ற நான் என் கைகளைக்␢ கழுவிக்கொண்டதும் வீண்தானா?⁾ 14⁽நாள்தோறும் நான்␢ வதைக்கப்படுகின்றேன்;␢ காலைதோறும்␢ கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.⁾ 15⁽“நானும் அவர்களைப்போல் பேசலாமே”␢ என்று நான் நினைத்திருந்தால்,␢ உம் மக்களின் தலைமுறைக்கு␢ நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.⁾ 16⁽ஆகவே, இதன் உண்மை என்னவென்று␢ கண்டறிய முயன்றேன்;␢ ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.⁾ 17⁽நான் இறைவனின் தூயகத்திற்குச்␢ சென்றபின்புதான்␢ அவர்களுக்கு நேரிடப்போவது என்ன␢ என்பதை உணர்ந்துகொண்டேன்.⁾ 18⁽உண்மையில் அவர்களை நீர்␢ சறுக்கலான இடங்களில் வைப்பீர்;␢ அவர்களை விழத்தாட்டி␢ அழிவுக்கு உள்ளாக்குவீர்.⁾ 19⁽அவர்கள் எவ்வளவு விரைவில்␢ ஒழிந்து போகிறார்கள்!␢ அவர்கள் திகில் பிடித்தவர்களாய்␢ அடியோடு அழிந்து போகிறார்கள்!⁾ 20⁽விழித்தெழுவோரின் கனவுபோல்␢ அவர்கள் ஒழிந்து போவார்கள்;␢ என் தலைவராகிய ஆண்டவரே,␢ நீர் கிளர்ந்தெழும்போது␢ அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.⁾ 21⁽என் உள்ளம் கசந்தது;␢ என் உணர்ச்சிகள் என்னை␢ ஊடுருவிக் குத்தின.⁾ 22⁽அப்பொழுது நான்␢ அறிவிழந்த மதிகேடனானேன்;␢ உமது முன்னிலையில்␢ ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.⁾ 23⁽ஆனாலும், நான் எப்போதும்␢ உமது முன்னிலையிலேதான்␢ இருக்கின்றேன்; என் வலக்கையை␢ ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.⁾ 24⁽உமது திருவுளப்படியே␢ என்னை நடத்துகின்றீர்;␢ முடிவில் மாட்சியோடு␢ என்னை எடுத்துக் கொள்வீர்.⁾ 25⁽விண்ணுலகில் உம்மையன்றி␢ எனக்கிருப்பவர் யார்?␢ மண்ணுலகில் வேறு விருப்பம்␢ உம்மையன்றி எனக்கேதுமில்லை.⁾ 26⁽எனது உடலும் உள்ளமும்␢ நைந்து போயின;␢ கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்␢ என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.⁾ 27⁽உண்மையிலேயே, உமக்குத்␢ தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;␢ உம்மைக் கைவிடும்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾ 28⁽நானோ கடவுளின் அண்மையே␢ எனக்கு நலமெனக் கொள்வேன்;␢ என் தலைவராகிய ஆண்டவரை␢ என் அடைக்கலமாய்க்கொண்டு␢ அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.⁾