1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽என் கடவுளே! என்␢ எதிரிகளினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து␢ எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.⁾
2⁽தீமை செய்வோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ கொலைவெறியரிடமிருந்து␢ என்னைக் காத்தருளும்.⁾
3⁽ஏனெனில், அவர்கள் என்னைக்␢ கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;␢ கொடியவர் என்னைத் தாக்கத்␢ திட்டமிட்டுள்ளனர்;␢ நானோ, ஆண்டவரே!␢ குற்றம் ஏதும் இழைக்கவில்லை;␢ பாவம் ஏதும் செய்யவில்லை;⁾
4⁽என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,␢ அவர்கள் ஓடிவந்து␢ என்னைத் தாக்க முனைகின்றனர்;␢ என்னை எதிர்கொள்ளுமாறு␢ எழுந்தருளும்;␢ என்னைக் கண்ணோக்கும்,⁾
5⁽படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் இஸ்ரயேலின் கடவுள்!␢ பிற இனத்தார் அனைவரையும்␢ தண்டிக்க எழுந்துவாரும்;␢ தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள்␢ எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)⁾
6⁽அவர்கள் மாலைவரை காத்திருந்து,␢ அதன்பின் நாய்களைப் போலக்␢ குரைத்து கொண்டு␢ நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.⁾
7⁽அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; § அவர்களின் நாவின் சொற்கள்␢ வாள் போன்றவை;␢ ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்␢ யார்?’ என்கின்றார்கள்.⁾
8⁽ஆனால், ஆண்டவரே,␢ நீர் அவர்களைப் பார்த்து␢ எள்ளி நகைக்கின்றீர்;␢ பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து␢ நீர் ஏளனம் செய்கின்றீர்;⁾
9⁽நீரே என் ஆற்றல்! உமது உதவியை␢ எதிர்பார்க்கின்றேன்;␢ ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.⁾
10⁽என் கடவுள் தமது பேரன்பால்␢ என்னை எதிர்கொள்ள வருவார்;␢ கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை␢ நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.⁾
11⁽அவர்களை ஒரேயடியாய்க்␢ கொன்று விடாதேயும்;␢ இல்லையேல், உம் வல்லமையை␢ என் மக்கள் மறந்துவிடுவர்;␢ என் தலைவரே! எங்கள் கேடயமே!␢ அவர்களை உமது வலிமையால்␢ நிலைகுலையச் செய்யும்.⁾
12⁽அவர்களின் வாய் பேசுவதும்␢ நா உரைப்பதும் பாவமே;␢ அவர்கள் தற்பெருமை␢ அவர்களைச் சிக்கவைப்பதாக!␢ அவர்கள் சபிக்கின்றனர்;␢ அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.⁾
13⁽ஆகவே, வெகுண்டெழுந்து␢ அவர்களை அழித்துவிடும்;␢ இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;␢ அப்பொழுது, கடவுள்␢ யாக்கோபின் மரபினரை␢ ஆள்கின்றார் எனவும்␢ அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும்␢ உள்ளது எனவும் அவர்கள்␢ உணர்ந்து கொள்வார்கள். (சேலா)⁾
14⁽அவர்கள் மாலைவரை காத்திருந்து,␢ அதன்பின், நாய்களைப்போல␢ குரைத்துக் கொண்டு␢ நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.⁾
15⁽அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;␢ வயிறு நிறையாவிடில்,␢ முறுமுறுக்கின்றனர்.⁾
16⁽நானோ உமது ஆற்றலைப்␢ புகழ்ந்து பாடுவேன்;␢ காலையில் உமது பேரன்பைப் பற்றி␢ ஆர்ப்பரித்துப் பாடுவேன்;␢ ஏனெனில், நெருக்கடியான வேளையில்␢ நீர் எனக்கு அரணும்␢ அடைக்கலமுமாய் இருந்தீர்.⁾
17⁽என் ஆற்றல் நீரே!␢ உம்மைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;␢ கடவுளே எனக்குப் பேரன்பு!⁾