திருப்பாடல்கள் 116

முந்திய அடுத்த
1⁽அல்லேலூயா! ஆண்டவர்மீது␢ அன்புகூர்கின்றேன்;␢ ஏனெனில், எனக்கு இரங்குமாறு␢ நான் எழுப்பிய குரலை␢ அவர் கேட்டருளினார்.⁾ 2⁽அவரை நான் மன்றாடிய நாளில்,␢ எனக்கு அவர் செவிசாய்த்தார்.⁾ 3⁽சாவின் கயிறுகள்␢ என்னைப் பிணித்துக் கொண்டன;␢ பாதாளத்தின் துன்பங்கள்␢ என்னைப் பற்றிக் கொண்டன;␢ துன்பமும் துயரமும்␢ என்னை ஆட்கொண்டன.⁾ 4⁽நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;␢ ‛ஆண்டவரே! என் உயிரைக்␢ காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.⁾ 5⁽ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;␢ நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.⁾ 6⁽எளிய மனத்தோரை␢ ஆண்டவர் பாதுகாக்கின்றார்;␢ நான் தாழ்த்தப்பட்டபோது␢ எனக்கு மீட்பளித்தார்.⁾ 7⁽‛என் நெஞ்சே! நீ மீண்டும்␢ அமைதிகொள்; ஏனெனில்,␢ ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’.⁾ 8⁽என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;␢ என் கண் கலங்காதபடியும்␢ என் கால் இடறாதபடியும் செய்தார்.⁾ 9⁽உயிர் வாழ்வோர் நாட்டில், நான்␢ ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.⁾ 10⁽‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று␢ சொன்னபோதும்␢ நான் நம்பிக்கையோடு இருந்தேன்.⁾ 11⁽‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று␢ என் மனக்கலக்கத்தில்␢ நான் சொன்னேன்.⁾ 12⁽ஆண்டவர் எனக்குச் செய்த␢ எல்லா நன்மைகளுக்காகவும்␢ நான் அவருக்கு␢ என்ன கைம்மாறு செய்வேன்?⁾ 13⁽மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,␢ ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.⁾ 14⁽இதோ! ஆண்டவருடைய மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ அவருக்கு என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾ 15⁽ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு␢ அவரது பார்வையில்␢ மிக மதிப்புக்குரியது.⁾ 16⁽ஆண்டவரே! நான் உண்மையாகவே␢ உம் ஊழியன்; நான் உம் பணியாள்;␢ உம் அடியாளின் மகன்;␢ என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.⁾ 17⁽நான் உமக்கு␢ நன்றிப் பலி செலுத்துவேன்;␢ ஆண்டவராகிய உம் பெயரைத்␢ தொழுவேன்;⁾ 18⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾ 19⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾