திருப்பாடல்கள் 68

முந்திய அடுத்த
1⁽கடவுள் எழுந்தருள்வார்;␢ அவருடைய எதிரிகள் § சிதறடிக்கப்படுவார்கள்;␢ அவரை வெறுப்போர்␢ அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;⁾ 2⁽புகை அடித்துச் செல்லப்படுவதுபோல␢ அடித்துச் செல்லப்படுவர்;␢ நெருப்புமுன் மெழுகு␢ உருகுவது போலக்␢ கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.⁾ 3⁽நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்;␢ கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்;␢ மகிழ்ந்து கொண்டாடுவர்.⁾ 4⁽கடவுளைப் புகழ்ந்து பாடி␢ அவரது பெயரை போற்றுங்கள்;␢ மேகங்கள்மீது வருகிறவரை␢ வாழ்த்திப் பாடுங்கள்;␢ ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்;␢ அவர்முன் களிகூருங்கள்.⁾ 5⁽திக்கற்ற பிள்ளைகளுக்குத்␢ தந்தையாகவும்␢ கணவனை இழந்தாளின்␢ காப்பாளராகவும் இருப்பவர்,␢ தூயகத்தில் உறையும் கடவுள்!⁾ 6⁽தனித்திருப்போர்க்குக் கடவுள்␢ உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;␢ சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு␢ அழைத்துச் செல்கின்றார்; ஆனால்,␢ அவருக்கு எதிராகக் கிளம்புவோர்␢ வறண்ட நிலத்தில் வாழ்வர்.⁾ 7⁽கடவுளே! நீர் உம்முடைய␢ மக்கள் முன்சென்று␢ பாலைவெளியில் நடைபோட்டுச்␢ செல்கையில், (சேலா)⁾ 8⁽சீனாயின் கடவுள் வருகையில்,␢ பூவுலகு அதிர்ந்தது;␢ இஸ்ரயேலின் கடவுள் வருகையில்␢ வானம் மழையைப் பொழிந்தது.⁾ 9⁽கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது␢ மிகுதியாக மழைபொழியச் செய்தீர்;␢ வறண்டுபோன நிலத்தை␢ மீண்டும் வளமாக்கினீர்.⁾ 10⁽உமக்குரிய உயிர்கள்␢ அதில் தங்கியிருந்தன;␢ கடவுளே! நீர் நல்லவர்;␢ எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு␢ மறுவாழ்வு அளித்தீர்.⁾ 11⁽என் தலைவர் செய்தி அறிவித்தார்;␢ அச்செய்தியைப் பரப்பினோர்␢ கூட்டமோ பெரிது;⁾ 12⁽‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்;␢ புறங்காட்டி ஓடினார்கள்’!␢ வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள்␢ கொள்ளைப்பொருள்களைப்␢ பகிர்ந்து கொண்டார்கள்.⁾ 13⁽நீங்கள் தொழுவங்களின் நடுவில்␢ படுத்துக்கொண்டீர்களோ?␢ வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும்,␢ பசும்பொன்னால் மூடிய␢ அதன் இறகுகளும்␢ அவர்களுக்குக் கிடைத்ததே!⁾ 14⁽எல்லாம் வல்லவர் அங்கே␢ அரசர்களைச் சிதறடித்தபோது,␢ சல்மோன் மலையில் பனிமழை பெய்தது.⁾ 15⁽ஓ மாபெரும் மலையே!␢ பாசானின் மலையே!␢ ஓ கொடுமுடி பல கொண்ட மலையே!␢ பாசானின் மலையே!⁾ 16⁽ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே!␢ கடவுள் தம் இல்லமாகத்␢ தேர்ந்துகொண்ட இந்த மலையை␢ நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்?␢ ஆம், இதிலேதான் ஆண்டவர்␢ என்றென்றும் தங்கி இருப்பார்.⁾ 17⁽வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம்,␢ பல்லாயிரம் கொண்ட என் தலைவர்␢ சீனாய் மலையிலிருந்து␢ தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்.⁾ 18⁽உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்;␢ சிறைப்பட்ட கைதிகளை␢ இழுத்துச் சென்றீர்;␢ மனிதரிடமிருந்தும்␢ எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும்␢ பரிசுகள் பெற்றுக் கொண்டீர்;␢ கடவுளாகிய ஆண்டவர்␢ அங்கேதான் தங்கியிருப்பார்.⁾ 19⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ நாளும் நம்மை அவர்␢ தாங்கிக் கொள்கின்றார்;␢ இறைவனே நம் மீட்பு. (சேலா)⁾ 20⁽நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்;␢ நம் தலைவராகிய ஆண்டவர்தாம்␢ இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.⁾ 21⁽அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்;␢ தம் தீய வழிகளில்␢ துணிந்து நடப்போரின்␢ மணிமுடியை நொறுக்குவார்.⁾ 22⁽என் தலைவர், ‛பாசானிலிருந்து␢ அவர்களை அழைத்து வருவேன்;␢ ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.⁾ 23⁽அப்பொழுது உன் கால்களை␢ இரத்தத்தில் தோய்ப்பாய்;*␢ உன் நாய்கள் எதிரிகளிடம்␢ தமக்குரிய பங்கைச் சுவைக்கும்’ § என்று சொன்னார்.⁾ 24⁽கடவுளே! நீர் பவனி செல்வதை,␢ என் கடவுளும் அரசருமானவர்␢ தூயகத்தில் பவனி செல்வதை,␢ அனைவரும் கண்டனர்.⁾ 25⁽முன்னால் பாடகரும்␢ பின்னால் இசைக்கருவிகளை␢ வாசிப்போரும்,␢ நடுவில் தம்புரு வாசிக்கும்␢ பெண்களும் சென்றனர்.⁾ 26⁽மாபெரும் சபை நடுவில்␢ கடவுளைப் போற்றுங்கள்;␢ இஸ்ரயேலர் கூட்டத்தில்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்.⁾ 27⁽அதோ! இளையவன் பென்யமின்,␢ அவர்களுக்கு முன்னே செல்கின்றான்;␢ யூதாவின் தலைவர்கள்␢ கூட்டமாய்ச் செல்கின்றார்கள்;␢ செபுலோன் தலைவர்களும்␢ நப்தலியின் தலைவர்களும்␢ அங்குள்ளார்கள்.⁾ 28⁽கடவுளே!␢ உம் வல்லமையைக் காட்டியருளும்;␢ என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே!␢ உம் வல்லமையைக் காட்டியருளும்!⁾ 29⁽எருசலேமில் உமது கோவில் உள்ளது;␢ எனவே,␢ அங்கு அரசர்␢ உமக்குக் காணிக்கை கொணர்வர்.⁾ 30⁽நாணலிடையே இருக்கும்␢ விலங்கினைக் கண்டியும்;␢ மக்களினங்களாகிய␢ கன்றுகளோடு வருகிற § காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்;␢ வெள்ளியை நாடித் திரிவோரை␢ உமது காலடியில் மிதித்துவிடும்;␢ போர்வெறி கொண்ட␢ மக்களினங்களைச் சிதறடியும்⁾ 31⁽எகிப்திலிருந்து அரச தூதர்␢ அங்கே வருவர்;␢ கடவுள்முன் எத்தியோப்பியர்␢ கைகூப்பி நிற்க விரைவர்.⁾ 32⁽உலகிலுள்ள அரசர்களே!␢ கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஆண்டவரைப்␢ போற்றிப் பாடுங்கள். (சேலா)⁾ 33⁽வானங்களின்மேல்,␢ தொன்மைமிகு வானங்களின்மேல்,␢ ஏறிவரும் அவரைப் புகழுங்கள்;␢ இதோ! அவர் தம் குரலில்,␢ தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.⁾ 34⁽கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்;␢ அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது;␢ அவரது வலிமை␢ மேக மண்டலங்களில் உள்ளது.⁾ 35⁽கடவுள் தம் தூயகங்களில்␢ அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்;␢ இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு␢ வலிமையையும் ஊக்கத்தையும்␢ அளிக்கின்றார்;␢ கடவுள் போற்றி! போற்றி!⁾