திருப்பாடல்கள் 136

முந்திய அடுத்த
1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்.␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 2⁽தெய்வங்களின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 3⁽தலைவர்களின் தலைவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 4⁽தாம் ஒருவராய் மாபெரும்␢ அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 5⁽வான்வெளியை␢ மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 6⁽கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 7⁽பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 8⁽பகலை ஆள்வதற்கெனக்␢ கதிரவனை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 9⁽இரவை ஆள்வதற்கென␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 10⁽எகிப்தின் தலைப்பேறுகளைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 11⁽அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை␢ வெளிக்கொணர்ந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 12⁽தோளின் வலிமையாலும்␢ ஓங்கிய புயத்தாலும் அதைச்␢ செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 13⁽செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 14⁽அதன் நடுவே இஸ்ரயேலை␢ நடத்திச் சென்றவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 15⁽பார்வோனையும் அவன் படைகளையும்␢ செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 16⁽பாலை நிலத்தில் தம் மக்களை␢ வழிநடத்தியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 17⁽மாபெரும் மன்னர்களை வெட்டி␢ வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 18⁽வலிமைமிகு மன்னர்களைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 19⁽எமோரியரின் மன்னன் சீகோனைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 20⁽பாசானின் மன்னன் ஓகைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 21⁽அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 22⁽அதைத் தம் அடியார்களாகிய␢ இஸ்ரயேலர்க்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 23⁽தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு␢ கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 24⁽நம் எதிரிகளினின்று நம்மை␢ விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 25⁽உடல்கொண்ட அனைத்திற்கும்␢ உணவூட்டுபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 26⁽விண்ணுலகின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾